×

108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சித்தனர்.

அப்போது ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அதிக சத்துத்துடன் வெடித்து, தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகலறிந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 108 ஆம்புலன்ஸ் முற்றிலும் தீயில் கருகியது.

The post 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Brahmadesam ,Dindivanam.… ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் அருகே கணவனின் தகாத உறவால் தற்கொலை செய்து கொண்ட மனைவி